செவ்வாய், 22 டிசம்பர், 2009

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை! எப்போது அமலுக்கு வரும்?


முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007ல் பிரதமரிடம் சமர்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட இவ்வறிக்கை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009 இந்த அறிக்கையை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. சிறுபான்மையினர் என்று அடையாளப்படுபவர் அனைத்து வகையான மத, மொழிவாரி மக்களை சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் என்றால் இந்துத்துவ சக்திகள் இவ்வறிக்கையை எதிர்பதாக பத்ரிகையில் பேட்டியளித்துள்ளார்கள். ஆனால், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் கஷ்மீர், அஸாம், மேலாய போன்ற மாநிலத்தில் குறைவாக உள்ளதால் இந்துக்களும் சிறுபான்மையினராக கருதப்பட்டு இவர்களும் இந்த இடஒதுக்கிட்டில் பயன் பெறுவார்கள் என்று நீதிபதி விவரித்துள்ளார்கள்.


அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் சிறுபான்மை, பெருபான்மை என்ற வேறுபாடுகளை களையடுக்கும் விதமாக சமவாய்ப்பு ஆனையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறித்தியுள்ளார். மேலும் நீதியரசர் சச்சார் அறிக்கையில் தெரிவித்தவாறு, அரசு நலத்திட்டங்கள் யாவும் முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்றும் அதை களையடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுபான்மை அதிகமாக வழும் பகுதிகளையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறித்தியுள்ளது.


இந்திய முஸ்லீம்கள் இவ்வரிக்கையை வரவேற்கும் அதே வேளையில் ஆளும் வர்கத்தினர் முஸ்லீம்களின் நியமான உணர்வுகளை புரிந்துக் கொண்டு, உடனே இவ்வரிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான்மையினர்களுக்கு என்று தனி இட ஒதுக்கிட்டை உடனே வழங்க வேண்டும்.


காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரியா ஜனதா தளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. இந்த அறிக்கையை மக்களைவையில் சமர்பிக்க வேண்டும் என்று பல முறை லாலு பிரசாத் அவர்கள் மக்களவையில் குரல் எழுப்பினார் என்பது குறிப்பிட தக்கது.


ஆதே வேளையில் இவ்வரிக்கை வெளியிட எவ்வாறு குரல் எழுப்பினாரே அவ்வாரே இதை சட்டமாக்கும் வரை அவர் தெடர்ந்து மக்களைவில் குரல் எழுப்பி போராடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.


இவ்வளவு பட்டவர்தனமாக முஸ்லிம்களின் நிலைமை தெளிபடுத்தபட்ட பிறகும் ஆளும் கட்சிகள் இதை புறக்கனித்து, காலத்தை தாமதித்தால், முஸ்லிம்கள் கடும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். முஸ்லீம்கள் இதை ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். அளுபவரின் நடவடிக்கை என்ன என்பதை பெருத்திருந்து பார்ப்போம்…


வழக்கம் போல், பி.ஜே.பி எதிர்க்கிறது. இங்கு சிறுபான்மையினர் என்று அழைப்பது காஷ்மிர், அஸாம், மிசோராம், மேகலாய பேன்ற மாநிலங்களில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களை தான் என்று தெரியவில்லை போல! இந்துக்களையே எதிர்க்கும் இந்துத்துவ கட்சி பி.ஜே.பி யாகத்தான் இருக்க முடியும்.


இவர்களை பிடித்துள்ள மத வெறி, இவர்களை ஒருகாலும் சிந்திக்க விடாது போல இருக்கு…


செய்தி: முகானே தவ்பீக் – தம்மாம் மண்டலம்



வெள்ளி, 18 டிசம்பர், 2009

குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளையில்















கடந்த 18-12-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மார்க்க சொற்ப்பொழிவு அந்தலோசில் உள்ள மஸ்ஜிதுன் அமீரியில் வெகு சிறப்பாக நடைப் பெற்றது. நபி வழியா? புது வழியா? என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் MISc அவர்கள் சிர்க்,கந்தூரி,கூட்டு,துவா,முறையற்ற தொழுகை,மீலாது விழா,மிஹ்ராஜ்,பராத்,மௌலூது,போன்ற புதுமைகளை பட்டியலிட்டு இவையெல்லாம் நம்மை வழிகேட்டில் கொண்டு சென்றிருக்கும் விஷயங்கள் என்பதை அழகாக தெளிவுபடுத்தினார்.வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனுற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 17 டிசம்பர், 2009

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா


ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி
மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக
நடந்து வருகின்றன.ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோ
அலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி
தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.


காங்கிரஸ் அரசின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. மக்கள்
கொந்தளிக்கும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக இது போல் வாக்குறுதி கொடுத்து
பின்னர் கிடப்பில் போடுவது தான் காலம் காலமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வரும்
தந்திரம். பாபர் மசூதி அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்பது போல் நூற்றுக்கணக்கான
உதாரணங்கள் உள்ளன.அதற்கான உள்ளடி வேலைகளையும் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துள்ளது.


மாநிலத்தைப் பிரிப்பதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது
காங்கிரஸ் கூறுகிறது. சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்க முடியும்
என்றால் அது சாத்தியமே இல்லை. ஏனெனில் தெலுங்கனா பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்கள் மற்ற பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை விட குறைந்த எண்ணிக்கையில்
உள்ளனர். தெலுங்கானா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் ஆதரவாக
வாக்களிப்பார்கள். மற்றவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் தீர்மானம்
நிச்சயம் தோற்று விடும். சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்கப்படும்
என்றால் தெலுங்கானா பிரிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது
எப்படி?சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பிரிப்பது என்றால் அளவில் சிறிதாக உள்ள
புறக்கணிக்கப்படும் பகுதி ஒருக்காலும் பிரிந்து செல்ல முடியாது. பெரும்பாலானவர்கள்
பிரிந்து செல்ல ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எனவே ஒரு பக்கம் தெலுங்கானா
அமைக்கப்படும் என்று கூறிவிட்டு மறு பக்கம் தெலுங்கானா அமையாமல் இருப்பதற்குரிய
வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது காங்கிரஸ் அரசு.


பிரிக்கப்படுமா? பிரிக்கப்படாதா? என்பதை விட பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது
தான் நாம் ஆராய வேண்டிய விஷயம்.

ஆந்திர மாநிலத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால்
தான் இக்கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதை அறிய முடியும். வெள்ளையர்கள்
ஆட்சியின் போதும், நாடு விடுதலை அடைந்த போதும் ஆந்திரா என்ற மாநிலம் இருக்கவில்லை.
தெலுங்கானா எனப்படும் தக்கானம் தான் இருந்தது. இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின்
ஆளுகையின் கீழ் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் தனி நாடாக இருந்த
தெலுங்கானாவை இந்திய அரசு பலப்பிரயோகம் செய்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது.


இந்தியாவின் ஒரு மாநிலமாக தெலுங்கானா ஆக்கப்பட்டது. தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவில்
உள்ள மற்ற பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்தன. தெலுங்கு பேசும்
இப்பகுதியினர் சென்னை மாகாணத்தில் இருந்து தங்கள் பகுதியைப் பிரித்து தெலுங்கு
மாநிலம் அமைக்கப் போராடி வந்தனர். ராமுலு ரெட்டி என்பவர் இதற்காக உண்ணாவிரதம்
இருந்து உயிர் துறந்தவுடன் தெலுங்குப் பகுதிகளில் வன்முறை வெடித்து மத்திய அரசு
பணிந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு
பகுதிகள் ஆந்திரா எனும் மாநிலமாக ஆக்கப்பட்டது.


சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பகுதிகள் ஆந்திரா என்றும், நிஜாம் மன்னரின்
ஆளுகையில் இருந்த தெலுங்கானா இன்னொரு மாநிலமாகவும் இருந்தால் குடிமூழ்கப்
போவதில்லை. ஆனாலும் இரண்டையும் இணைத்து ஒரு மாநிலமாக்க வேண்டும் என்று நேருவும்,
பட்டேலும் விடாப்பிடியாக இருந்தனர். இணைக்க வேண்டும் என்று எந்தப் போராட்டமும்
நடக்காமல் இருந்தும் பெரும்பானமை மக்கள் அதை விரும்பாமல் இருந்தும் மக்கள்
விருப்பத்துக்கு மாற்றமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
இதற்காக அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு இணைப்பதில் கேடுகள் தான் அதிகம் என்று
அறிக்கை தந்த பின்பும் தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள்
விருப்பத்துக்கு எதிராக இணைத்தனர். இதற்குக் காரணம் என்ன?

தெலுங்கானா பகுதியில்
ஆதிலாபாத், நிஜாம் பாத், கரீம் நகர், ஹைதராபாத், மஹ்பூப் நகர் ஆகிய ஐந்து
மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டங்களாக இருந்தன. (மாவட்டங்களின்
பெயர்களே இதைச் செல்லும் வகையில் உள்ளன). மேடக், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி,
நலகொண்டா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை. தெலுங்கானா
தனி மாநிலமாக இருந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தொடர்ந்து ஒரு முஸ்லிம்
தான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலைமை வல்லபாய் பட்டேலுக்கும், நேருவுக்கும்
உறுத்தலாக இருந்தது.

சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச்
சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே
காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது. நேருவும் பட்டேலும்
அத்துடன் திருப்தி அடையவில்லை. சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க
சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து
முடித்தனர். அதாவது தெலுங்கானா பகுதியில் கூட முஸ்லிம்களின் பெரும்பான்மையை ஒழிக்க
வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். மக்கள் விரும்பாத போதும், இணைக்கக் கூடாது
என்று நிபுணர்கள் அறிக்கை அளித்த பின்பும் இணைப்பதற்கு நேரு சொன்ன காரணம் ஒரு மொழி
பேசும் மக்கள் இரண்டு மாநிலங்களாக இருக்கக் கூடாது என்பது தான். ஆனால் இந்தி
மொழிக்கு மட்டும் பல மாநிலங்கள் இருந்தது எப்படி என்று சிந்திக்கும் போது நேரு
சொன்ன காரணம் பொய்யானது என்பது தெரிய வரும்.


பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின்
காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும்,
தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான
மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை.அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது
அறுவடை செய்கிறது.


ஆந்திராவை விட தெலுங்கானா நீர் வளமும், கனிம வளமும் நிறைந்ததாக இருந்தும்
ஆந்திராவின் உயர்சாதி ஆதிக்கவாதிகளால் எல்லா வளமும் ஆந்திராவுக்கு என்று ஆனது.
தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதிகளில் 90 சதவீதம் தண்ணீர் ஆந்திராவுக்கும், பத்து
சதவீதம் தெலுங்கானாவுக்கும் என்று அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கே
நக்ஸலைட்டுகள் உருவானார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆதிக்க சாதியினர்
ஒடுக்குகிறார்கள் என்பதால் சட்டத்தை நக்ஸலைட்டுகள் கையில் எடுக்கும் அளவுக்கு
தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டது. இதை வெகுஜன மக்களின் கருத்தாக சந்திரசேகர ராவ்
மாற்றினார்.


ஹைதராபாத் நிஜாம் பெயரில் அமைந்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களும்
இப்போராட்டத்தில் குதித்ததால் நிலைமை தீவிரமடைந்தது; மத்திய அரசைப் பணிய
வைத்துள்ளது. இப்போது தெலுங்கானா பிரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை
மாநிலமாக அது அமையாது. ஏனெனில் குடியேற்றத்தின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை என்பது
குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் கனிசமான இடங்களை முஸ்லிம்கள் பெறக் கூடிய நிலைமை
தெலுங்கானாவில் இருக்கும். அநியாயமாக, கெட்ட எண்ணத்துடன் ஆந்திராவில் சேர்க்கப்பட்ட
தெலுங்கானா தனி மாநிலமாக ஆவது தான் செய்த அநியாயத்திற்கான ஒரே பரிகாரமாகும்
என்பதில் ஐயமில்லை.

மேலும் பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள்
பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும். 30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா
இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள்
தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க
முடியும். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குறைந்தது நான்கு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டால் ஒரு முதல்வரால் சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அமைச்சர்களை
மக்கள் எளிதாகச் சந்திக்க முடியும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற
முடியும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுவதை யாரும் மறுக்க
முடியாது.

மக்கள் போராட்டம் நடத்தாவிட்டாலும் அறிவும், தூர நோக்கும் மக்கள் நலனில்
அக்கறையும் உள்ள அரசாங்கம் தானாக முன் வந்து மாநிலங்களைப் பிரிக்க வேண்டும். ஒரு
மாநிலம் என்பது ஒரு கோடி முதல் இரண்டு கோடி மக்களைக் கொண்டதாக இருக்கும் வகையில்
பிரிப்பது நாட்டுக்கு நல்லது. இதனால் மொழி வெறி கூட மறைந்து போய்
விடும்.

குவைத் ஜஹ்ராவில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


கடந்த 11/12/09 அன்று குவைத் மண்டல டிஎன்டிஜே, ஜஹ்ரா கிளை சார்பாக தமிழ் ஜூம்ஆ பள்ளியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களுமாக 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்துல்கரீம் எம்.ஐ.எஸ்.ஸி ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதில் மார்க்கத்தை கடைபிடிப்பதற்காக சொந்த ஊரை, நாட்டை எவ்வாறு தியாகம் செய்ய ஸஹாபாக்கள் முன்வந்தார்களோ அது போல் நாமும் இந்த மார்க்கத்திற்காக எதையும் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை டிஎன்டிஜே ஜஹ்ரா கிளை சகோதரர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் டிஎன்டிஜே குவைத் மண்டல மர்கஸில் கேள்வி பதிலுடன் மார்க்க உரை நடைபெற்றது. அதிலும் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் நடைபெற்ற 4 வது மாபெரும் இரத்த தான முகாம்!






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 4ம் தேதி நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 4ம் தேதி நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும், குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முகாமில் 130க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது., குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முகாமில் 130க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 7 டிசம்பர், 2009

குவைத் மண்டலம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் நான்காவது இரத்த தான முகாம்.







கடந்த 4-12-2009ம் தேதி குவைத் மண்டல டிஎன்டிஜே சார்பாக நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும்இ குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற மாதம் 130 க்கும் மேற்ப்பட்டோர் குருதிக் குடை செய்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 டிசம்பர், 2009

குவைத் ஜஹரா ஏரியாவில் மார்க்க சொற்ப்பொழிவு.

அஸ்ஸலாமுஅலைக்கும்
குவைத் ஜஹரா ஏரியாவில் மார்க்க சொற்ப்பொழிவு.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்புரை : சகோதரர்.அப்துல் கரீம் MISc (TNTJ மாநில பேச்சாளர்,பேராசிரியர் இஸ்லாமிய கல்லூரி,கடையநல்லூர்.)
தலைப்பு : ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்.
நாள் : 11-12-2009 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு
இடம் : தமிழ் ஜூம்மா பள்ளி, கஸர, ஜஹரா.
குறிப்பு : TNTJ மர்கசிலிருந்து வாகனம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனி, 28 நவம்பர், 2009

குவைத் மண்டலம் நடத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகை




அல்லாஹ்வின் திருப்பெயரால் குவைத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழிப்படி குவைத் அப்பாசியாவில் உள்ள இந்தியன் செண்ட்ரல் பள்ளியின் கூடை பந்து விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

நம் சகோதரர்கள் நபி வழிப்படி திறந்தவெளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல சிரமங்களுக்கும் மத்தியில் குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாத்தினர் இந்தநிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
குவைத் மண்டல தாயி சகோ:முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் ஆற்றிய உரை வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.திரளான பெண்களும் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.
அதுசமயம் சென்ற வாரத்தில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் அஷ்ரபாக மாறிய கடலூர் ராஜாவையும்,சித்திக்காக மாறிய திருவாரூர் வேலுவையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டிற்க்கு மண்டல நிர்வாகத்தின் கீழ் சகோதரர்கள் நாமக்கல் ஹாஜா,கூத்தாநல்லூர் சித்திக்,மேலப்பாளையம் சலாவுதீன்,பெரம்பலூர் சிராஜ்,மற்றும் நாமக்கல் இப்ராஹிம்ஷா ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர். அல்லாஹு அக்பர்.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

இன்ஷா அல்லாஹ்குவைத் டி.என்.டி.ஜே நடத்தும் 4 வது மாபெரும் இரத்த தான முகாம்



இன்ஷா அல்லாஹ் குவைத் டி.என்.டி.ஜே நடத்தும் 4 வது மாபெரும் இரத்த தான முகாம்
நாள்: 4-12-2009 (வெள்ளிக்கிழமை) நேரம்:
காலை 7:30 மணி முதல் 2மணி வரை
இடம்: மத்திய இரத்த வங்கி, முபாரக்கியா மருத்துவமனை பின்புறம், ஜாப்ரியா.

இரத்தம் கொடுக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்

99265628, 99935406, 99363072, 97466427, 66683970, 97446783.

சனி, 7 நவம்பர், 2009

குவைத் மண்டலம் நடத்திய மூன்றாவது மாபெரும் இரத்த தான முகாம்.







அல்லாஹ்வின் பேருதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தனது மூன்றாவது மாபெரும் இரத்த தான முகாமை 6-11-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் ஜப்ரியாவில் உள்ள மத்திய இரத்த வங்கியில் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர்கள் சித்திக் மற்றும் ஜெகபர் அவர்களின் தலைமையில் நடத்தி முடித்திருக்கிறது. சுமார் 130 சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர்.அல்லாஹு அக்பர்.

கடந்த வருடங்களில் நிர்வாகிகள் இரத்த வங்கியை அணுகி விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் முகாம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அனுமதி பெற்று நடத்தினார்கள்.

ஆனால் இந்த வருடம் எல்லாம் வல்ல இறைவன் அந்த வரலாற்றை மாற்றி அமைத்துள்ளான்.ஆம் குவைத் இரத்த வங்கி அதிகாரிகளே நம் மண்டல நிர்வாகிகளை அணுகி இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதால் இரத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையை நமக்கு ஒதுக்கித்தருவதாகவும் தாங்களே முன் வந்ததோடு ஒரு நிபந்தனையும் வைத்தனர்.

கடந்த முறை போல் ஒரே நேரத்தில் முன்னூறு நானூறு பேர் வந்தால் அவ்வளவு பேருக்கும் ஒரே நேரத்தில் இரத்தம் எடுக்கும் சவுகரியம் தங்களிடத்தில் இல்லாததால் நூறு பேர் மட்டும் வாருங்கள்,மறுபடியும் எத்தனை வெள்ளிக்கிழமை வேண்டுமானாலும் ஒதுக்கித்தருகிறோம் மற்றவர்களை அப்போது அழைத்து வாருங்கள் என்றனர்.

அதன்படி யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பாத நமது ஜமாஅத் நிர்வாகிகள் சரி என்று ஒப்புக்கொண்டனர்.

எனவே நூறு பேர் மட்டும் 6-11-2009 வெள்ளிக்கிழமையும்,
மற்றவர்கள் 4-12-2009 வெள்ளிக்கிழமையும் இரத்தம் வழங்க ஏற்பாடு செய்வது என தீர்மானித்து மண்டல மருத்துவ அணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.அல்லாஹு அக்பர்

குவைத் மத்திய இரத்த வங்கியின் இரத்தம் எடுக்கும் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் நபீல் முகம்மது அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்,தனது வாழ்நாளில் இப்படி தன்னார்வத்தோடும், அமைதியாகவும், போட்டிப் போட்டுக் கொண்டு மறுமையை மட்டுமே இலக்காக கொண்டு,இரத்த தானம் செய்யும் ஒரு கூட்டத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார்.

அதுமட்டுமல்லாது இரத்தத்தை வியர்வையாக சிந்தி பிழைப்பு நடத்தும் இந்த சகோதரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரத்த தானம் செய்வது தனக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இரத்த தானம் செய்துகொண்டிருந்த போது பாகிஸ்த்தானை சேர்ந்த அஷார் முகம்மது என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது சகோதரர் அக்தர் முகம்மதுக்கு அவசரமாக இரத்தம் தேவை ஏற்ப்பட்டதால் ஜமாஅத் நிர்வாகிகளை அணுகினார்,உடனே குவைத் மண்டல முன்னாள் செயலாளர் உசேன் பாபு அந்த சகோதரருக்கு இரத்தம் வழங்கினார்.

இலங்கையை சேர்ந்த சகோதரர் c.m.p.முகம்மது என்ற சகோதரர் நம்மிடம் கூறுகையில் தானக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தோடு சேர்ந்து இது போன்ற சேவைகளில் ஈடுபடுவது பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும்,தான் சகோதரர் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாக்களை கேட்டுத்தான் தூய இஸ்லாத்தை தெரிந்துகொண்டதாகவும்,பதினைந்து வருடத்திற்கு முன்பு க்ளோரியா மார்த்தா என்ற பெங்களூரை சேர்ந்த ஒரு கிருத்துவ பெண்மணிதான் பி.ஜெ.அவர்களின் ஓலி நாடாவை கொடுத்து இவர் எவ்வளவு அழகாக இஸ்லாத்தை சொல்லியிருக்கிறார் கேட்டுப்பார் என்று கொடுத்ததாகவும் கூறினார்.

மேலும் லஜ்னா தவாசிலை சேர்ந்த குவைத்திகளும்,எகிப்து நாட்டவர்களும்,மற்றும் இஸ்லாம் அல்லாத சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 அக்டோபர், 2009

குவைத் மங்காஃபில் முதன் முறையாக மார்க்க சொற்ப்பொழிவு இன்ஷா அல்லாஹ்...

அல்லாஹ்வுடைய பேருதவியால் குவைத் மந்காஃபில் முதன் முறையாக மார்க்க சொற்ப்பொழிவு நடத்த நமது ஜமாஅத் ஏற்ப்பாடு செய்துள்ளது.

இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் நமது குவைத் மண்டல இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் : முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

நாள்: : 23-10-2009 (வெள்ளிக்கிழமை)
நேரம்: ஜும்மாத்தொலுகைக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ்.

இடம்: உக்பா பின் ஆமிர் பள்ளிவாசல், கத்தா-3, ஃபெரா கேஸ் கிடங்கு அருகில், மங்காஃப் (mangaf)

நிகழ்ச்சி ஏற்ப்பாடு TNTJ மங்காஃப் கிளை சகோதரர்கள்.
தொடர்புக்கு:97945629, 97540797

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

குவைத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை


குவைத்தில் நபி வலித்தடல் தொழுகை குவைத்தில் நபி வழியில் திடலில் தொழுவதற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள் என்று பலர் TNTJ வை வற்ப்புறுத்தி வந்தனர் ஒரு நாட்டில் அந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு திடல் அடையாளம் காணப்பட்டு அங்கு நபி வழியில் தொழுகை நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை வெளி நாட்டில் பணிபுரிபவர்கள் அறிவர் இருப்பினும் அல்லாஹ் உதவுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு TNTJ குவைத் மண்டலம் அப்பாசியா பகுதியில் இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் மைதானத்தில் முதல் முறையாக திடல் தொழுகையை நடத்தியது.

(கடந்த வருடங்களில் உள்ளரங்குகளில் பெருநாள் தொழுகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.)
பெருநாள் தினமான 20-09-2009 அன்று சரியாக காலை 6.30 மணிக்கு நடந்தது தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் குத்பா உரையாற்றினார்
அதன் பிறகு ரமலானில் கடைசி பத்து இரவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு முதல் பரிசாக சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்கள் நூறு கிலோ பொருட்களை இலவசமாக தாயகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்றுக்கொண்டார்.
இரண்டாவது பரிசும் சுப்ரீம் கார்கோ சித்திக் அவர்களே அம்பது கிலோ எடை பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்க ஒப்புதல் அளித்தார்
மூன்றாவது பரிசாக ஜஹரா கிளை கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த சகோ முஜிபுர்ரகுமான் அவர்கள் பதினைந்து தினார் மதிப்புள்ள கைகடிகாரத்தை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

மேலும் வந்திருந்த மக்கள் இனி எல்லா வருடமும் இது போன்ற திடல் தொழுகைக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு களைந்து சென்றனர்.

குவைத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகள்







ரமலான் மாதத்தின் சிறப்பு மிக்க லைலத்துல் கத்ரின் நன்மைகளை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரமலானின் கடைசி பத்து இரவுகளில் நமது ஜமாஅத் குவைத் ஹவல்லியில் ஜடியல் பிரிப்பரேசன் பள்ளிக்கூடத்தின் வளாகத்தில் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலை மோதியது அதிலும் ஒற்றை படை இரவுகளில் ஏற்ப்பாட்டாளர்கள் எப்படி சமாளிப்பது என்று திணறும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மேலும் நபி வழியில் இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை பலர் இப்போதுதான் தெரிந்து கொண்டோம் என்று சொன்னது நிகழ்ச்சியின் பலனைக் காட்டியது.தொழுகைக்கு பிறகு தாயகத்திலிருந்து வந்திருந்த மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் தொடர் சொற்ப்பொழிவு நடத்தினார்.

சகோதரரின் உருக்கமான சொற்ப்பொழிவு வந்திருந்த மக்களுக்கு மறுமையைப் பற்றிய பயத்தை அதிகப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுமாய் வந்திருந்த மக்களுக்கு ஹோட்டலில் சமைக்கும் உணவு ஸஹர் நேரத்தில் சரிவராது என்று கருதிய நிர்வாகம் மாற்று ஏற்ப்பாடு செய்யும் யோசனையில் இருந்த வேளையில் தாமாக முன் வந்து சமைத்து தருவதாக சொன்ன நம் கொள்கை சகோட்கரர்கள் வடபாதி ஜாபர் தலைமையில் சர்புதீன்,சலாவுதீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோரிடம் ஸஹர் உணவு தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சகோதரர்கள் தங்கள் அலுவலக பனி முடித்து வந்தும் அலுப்பில்லாமல் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தட்டுப்பாடில்லாமல் சுவையான உணவை வழங்கினார்.
மேலும் தொழுகைக்கு வரும் மக்களிடம் சாப்பாட்டிற்கு ஏதாவது கட்டணம் வசூலித்தால் உணவு தட்டுப்பாட்டை தடுக்கலாம் என்று சிலர் கொடுத்த தவறான யோசனையை அல்லாஹ்வின் உதவியால் சகோதரர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கட்டணத்தை வசூலித்து மார்கத்தை சொல்லிக்கொடுக்கும் அவல நிலைக்கு அல்லாஹ் ஒருபோதும் நம்மை ஆளாக்க மாட்டான்.வீட்டில் வேலை செய்யும் நம் கொள்கை சகோதரனின் கால் தினார்,அறை தினாரில் அல்லாஹ் நமக்கு அதிகமாகவே பரக்கத்தை வைத்திருக்கிறான் அல்லாஹு அக்பர்...

ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில்


ஜஹரா இப்தார் நிகழ்ச்சி கடைசி நோன்பின் இபஃதார் 19-09-2009 சனி அன்று ஜஹராவில் உள்ள ஜம்மியத்துல் துராஸ் லஜ்னாவின் உல் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது அது சமயம் தாயகத்திலிருந்து வந்த தலைமை கழக பேச்சாளரும் மேலாண்மை குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியை ஜஹரா கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இறுதியாக அனைவருக்கும் இபஃதார் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் மற்றும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்




ரமலானில் கடைசி வெள்ளி 18-09-2009 அன்று தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய அப்பாசியா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் வளாகத்தில் அஸர் தொழுகைக்கு பின் tntj குவைத் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் என்ற தலைப்பில் உலக ஆதாயத்திற்காக தவ்ஹீத் வேடம் இடுபவர்களின் பட்டியலையிட்டார்.

அதை தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் முழுமையாக இஸ்லாத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதில் பெண்கள் உட்பட சுமார் இருநூற்று ஐம்பது பேர் கலந்து கொண்டு பயனுற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைதான் கிளை சார்பாக இஃப்தார் உணவு வழங்க பட்டது அப்பாசியா ஏரியாவில் இது போன்ற நிகழ்ச்சிகளை TNTJ அடிக்கடி நடத்த வேண்டும் என்று கலந்துகொண்டோரில் பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சனி, 26 செப்டம்பர், 2009

நபிகளாரின் இறுதி நாட்கள்




குவைத் ஹவல்லியில் 18-09-2009 (வெள்ளிக்கிழமை) ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு நபிகளாரின் இறுதி நாட்கள் என்கிற தலைப்பில் மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்ற அப்பகுதியை சேர்நத ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மரணத்தின் பிடியில் மனிதன்


கடந்த 15 – 09-2009 (செவ்வாய் கிழமை) அன்று டி.என்.டி.ஜே அந்தலுஸ் கிளை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்சியில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்; மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மரணத்தின் பிடியில் மனிதன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அதிகமான சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர் இறுதியாக வந்திருவர்கள் அனைவருக்கும் இப்தார் உணவும் பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 23 செப்டம்பர், 2009

அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில்




குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

குவைத் மண்டலத்தின் வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள்.

தமிழ் தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்குவைத்தின் கடைசிப் பகுதியான ஜஹராவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் சிறப்பு நிகழ்ச்சியாக 11.09.2009 வெள்ளிக்கிழமை கசர் தமிழ் ஜும்ஆப் பள்ளியில் டி.என்.டி.ஜே மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் அனைத்து மக்களுக்கும் யார் முன் மாதிரி? முகம்மது நபி (ஸல்) அவர்களை முன் மாதிரியாக ஏற்று வாழ்ந்தால் அகில உலகிற்கும் என்ன என்ன நன்மைகள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

குவைத் மண்டலத்தின் வலுவான கிளைகளில் ஒன்றான ஜஹரா கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளை எப்போதும் போல் மிக சிறப்பாக செய்திருந்தார்கள். பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக ஜஹரா கிளையின் தலைவர் மௌலவி யூசுப் உலவி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள. ஜமியத்துராஸில் லஜ்னாவின் தாயி மௌலவி நவ்ஃபர் அவர்கள் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தந்தார்கள்.

குவைத்தில் வாழும் தமிழ் நாட்டு தாயிக்கள் தவ்ஹித் ஜமாத்தின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து வரும் வேளையில் இலங்கை தாயிக்கள் ஆர்வமாக உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் கடைபிடிக்க வேண்டிய அமல்களும்




குவைத் ஹதியாவில் மப்ரத்துத் தவாஸில் கைரிய்யா லஜ்னாவும், தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் ஹதியா கிளையும் இணைந்து 7.09.2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமலான் ஸஹர் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளும் கடைபிடிக்க வேண்டிய அமல்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் லஜ்னாவும், ஹதியா கிளை சகோதரர்களும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பேராசை என்ற தலைப்பில்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தைய்யா கிளையின் சார்பாக 4.09.2009 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பேராசை என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

அலட்சியப் படுத்தப்படும் நபி வழிகள் மற்றும் ஈமானை வலுப்படுத்த ஓர் வழி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இப்தார் நிகழ்ச்சி 11.09.2009 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பயான் மர்யம் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


பயான் முஷ்ரிப் கிளையின் செயலாளர் ஜியாவுதீன் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கியது. குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்ற தலைப்பில் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே ஈமானை வலுப்படுத்த ஓர் வழி என்று ஆவேசமாக ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.


அதைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரார் டி.என்.டி.ஜே மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் அலட்சியப்படுத்தப்படும் நபி வழிகள் என்ற தலைப்பில் நாம் அசட்டையாக தவறவிடும் நபிவழிகளை மிகவும் அழகுற சுட்டிக் காட்டினார்கள்.
சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயான் முஸ்ரிப் கிளையினர் மிகவும் சிறப்பபாக செய்திருந்தார்கள். இறுதியாக குவைத் மண்டல துணை செயலாளர் ஜின்னா அவர்கள் நன்றி கூறினார்.


இப்தார் உணவுடன் நிகழ்ச்சி பயனள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்

திங்கள், 7 செப்டம்பர், 2009

இஸ்லாம் கூறும் மனித நேயம்


குவைத் அம்கரா கேம்பில் உள்ள ஐ.பி.சி நிலையத்தின் உறுதுணையோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஜெஹரா கிளையினர்
5-09-2009 சனிக்கிழமை ; ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதரர்கள் என இரு தரப்பாரும் வருகை புரிந்திருந்தனர்.

நிகழ்ச்சியை ஐ.பி.சி. நிலையத்தில் பணியாற்றுகின்ற இஸ்லாமிய அழைப்பாளர் சகோ.நளீம் அவர்கள் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்ததைத் தொடர்ந்து இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து குவைத்திற்கு வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமானசகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக ஜெஹரா கிளையின் தலைவர்முகம்மது யூசுப் உலவி அவர்கள் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.இந்நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து பயன் பெற்று சென்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

என்னைக் கவர்ந்த இஸ்லாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி 4-09-2009 வெள்ளிக்கிழமை பின்தாஸில் உள்ள இந்தியன் கம்யூனிட்டி ஹாலில் அஸர் தொழுகைக்கு பின் தொடங்கியது.

குவைத் மண்டல தாயிகளில் ஒருவரான முகம்மது கான் வரவேற்புரையாற்ற மண்டல தலைவர் ராஜா அகமது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக நாங்கள் எப்படி இஸ்லாத்தால் கவரப்பட்டோம்? என்பதை புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் விளக்கினார்கள்.

முதலாவதாக சகோ.அமீர் அவர்கள் தான் இஸ்லாத்தில் வந்ததை உருக்கமாக விளக்கினார்.

அடுத்து கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த சகோதரி ரஹீமா அவர்கள் நான் விவாதம் செய்து தான் இஸ்லாத்தை ஏற்றேன். என்னை இஸ்லாம் கவர்ந்த அளவிற்கு இஸ்லாமியர்கள் கவரவில்லை எனக் கூறியது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சிந்திக்க வைத்தது.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ அப்துஸ்ஸமத் அவர்கள் குவைத் நாட்டுக்காரர் பணம் தருகிறேன் என ஆசை காட்டிய போதெல்லாம் ஈர்க்கப்படாத இஸ்லாம் பீ.ஜே மொழிபெயர்த்த குர்ஆனை படித்த போது ஈர்த்தது என்றார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ முகம்மது யூசுப் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே இந்நிகழச்சிக்கு உறுதுணையாக இருந்த மப்ரஅத்துத் தவாஸில் கைரிய்யாவின் நிறுவனர் அபுநயீஃப் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அடுத்ததாக இஸ்லாத்தை தழுவிய சகோ.சித்தீக் அவர்கள் நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் இஸ்லாம் இவ்வளவு அருமையான மார்க்கம் என்பதை டி.என்.டி.ஜே தலைமையில் நடைபெறும் மூன்று மாத வகுப்பில் சேர்ந்த பின்பு தான் அறிந்து கொண்டேன் என்று கூறியது உள்ளத்தை தொடும் விதமாக இருந்தது.

அடுத்ததாக இஸ்லாத்தை ஏற்ற சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றதற்காக இவன் தீவிரவாதியாக மாற்றப்பட்டு விட்டதாக கூறினர்.அதனையெல்லாம் இஸ்லாம் ஏவவில்லை என்பதை எளிய முறையில் விளக்கினார்.

அடுத்து இஸ்லாத்தை தழுவிய சகோ.முகம்மது ஷரீஃப் அவர்கள் தன்னை பீ.ஜே அவர்களின் எளிமையான விளக்கம் என்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

இந்நிகழ்ச்சி அனைத்தையும் மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறியாளர் சாகுல் அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இப்தாருக்குப்பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி நற்குணமும் நன்னடத்தையும் அழைப்புப் பணிக்கு அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக குவைத் மண்டல தலைமை தாயி முஹிப்புல்லாஹ் உமரி நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் உணவும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சனி, 29 ஆகஸ்ட், 2009

குவைத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நபி வழி உம்ரா பயணம்!




குவைத் டிஎன்டிஜே சார்பாக ஆர்வமுள்ள பலர் 19-8-09 முதல் 29-8-09 நாள் வரை நபி வழி உம்ரா விற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நபிவழியில் உம்ரா கிரியைகளை முடித்து விட்டு அனைவரையும் நபிவழியில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களான மினா, அரபா மைதானம், முஸ்தலிபா, ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டதோடு வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட ஸவ்ர் குகை, ஹிரா குகை அழைத்துச் செல்லப்பட்டது.இந்த உம்ரா பயணத்தின் மற்றொரு பிரிவாக நன்மையை நாடி மஸ்ஜிதுன்னபவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு மதீனாவில் வரலாற்று பின்னனிகளைக் கொண்ட இடங்களான குபா பள்ளி, கிப்லத்தைன் பள்ளி, அகழ்போர், உஹதுப் போர், பத்ர் போர் ஆகியன நடந்த இடங்களுக்கும், மக்கா மதீனா ஆகிய இரு இடங்களில் உள்ள வரலாற்றுப் பின்னனி சிறப்புகளைப் பற்றி குவைத் மண்டல தலைமை தாயி முகிப்புல்லாஹ் உமரி அவர்களின் சொற்பொழிவுகளும் நடந்தது.

இப்பயணத்தில் குவைத், ஜித்தா, மக்கா, மதீனா ஆகிய மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் சந்தித்து கலந்து பேசி அழைப்புப் பணி பற்றிய கருத்துப்பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.