செவ்வாய், 22 டிசம்பர், 2009

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை! எப்போது அமலுக்கு வரும்?


முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு 2004ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007ல் பிரதமரிடம் சமர்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட இவ்வறிக்கை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009 இந்த அறிக்கையை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீத ஒதுக்கீடும் வழங்கலாம் என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரை அளித்துள்ளது. சிறுபான்மையினர் என்று அடையாளப்படுபவர் அனைத்து வகையான மத, மொழிவாரி மக்களை சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்பட்டது. சிறுபான்மையினர் என்றால் இந்துத்துவ சக்திகள் இவ்வறிக்கையை எதிர்பதாக பத்ரிகையில் பேட்டியளித்துள்ளார்கள். ஆனால், இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் கஷ்மீர், அஸாம், மேலாய போன்ற மாநிலத்தில் குறைவாக உள்ளதால் இந்துக்களும் சிறுபான்மையினராக கருதப்பட்டு இவர்களும் இந்த இடஒதுக்கிட்டில் பயன் பெறுவார்கள் என்று நீதிபதி விவரித்துள்ளார்கள்.


அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் சிறுபான்மை, பெருபான்மை என்ற வேறுபாடுகளை களையடுக்கும் விதமாக சமவாய்ப்பு ஆனையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறித்தியுள்ளார். மேலும் நீதியரசர் சச்சார் அறிக்கையில் தெரிவித்தவாறு, அரசு நலத்திட்டங்கள் யாவும் முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்றும் அதை களையடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிறுபான்மை அதிகமாக வழும் பகுதிகளையும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறித்தியுள்ளது.


இந்திய முஸ்லீம்கள் இவ்வரிக்கையை வரவேற்கும் அதே வேளையில் ஆளும் வர்கத்தினர் முஸ்லீம்களின் நியமான உணர்வுகளை புரிந்துக் கொண்டு, உடனே இவ்வரிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான்மையினர்களுக்கு என்று தனி இட ஒதுக்கிட்டை உடனே வழங்க வேண்டும்.


காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரியா ஜனதா தளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. இந்த அறிக்கையை மக்களைவையில் சமர்பிக்க வேண்டும் என்று பல முறை லாலு பிரசாத் அவர்கள் மக்களவையில் குரல் எழுப்பினார் என்பது குறிப்பிட தக்கது.


ஆதே வேளையில் இவ்வரிக்கை வெளியிட எவ்வாறு குரல் எழுப்பினாரே அவ்வாரே இதை சட்டமாக்கும் வரை அவர் தெடர்ந்து மக்களைவில் குரல் எழுப்பி போராடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.


இவ்வளவு பட்டவர்தனமாக முஸ்லிம்களின் நிலைமை தெளிபடுத்தபட்ட பிறகும் ஆளும் கட்சிகள் இதை புறக்கனித்து, காலத்தை தாமதித்தால், முஸ்லிம்கள் கடும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். முஸ்லீம்கள் இதை ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். அளுபவரின் நடவடிக்கை என்ன என்பதை பெருத்திருந்து பார்ப்போம்…


வழக்கம் போல், பி.ஜே.பி எதிர்க்கிறது. இங்கு சிறுபான்மையினர் என்று அழைப்பது காஷ்மிர், அஸாம், மிசோராம், மேகலாய பேன்ற மாநிலங்களில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களை தான் என்று தெரியவில்லை போல! இந்துக்களையே எதிர்க்கும் இந்துத்துவ கட்சி பி.ஜே.பி யாகத்தான் இருக்க முடியும்.


இவர்களை பிடித்துள்ள மத வெறி, இவர்களை ஒருகாலும் சிந்திக்க விடாது போல இருக்கு…


செய்தி: முகானே தவ்பீக் – தம்மாம் மண்டலம்



வெள்ளி, 18 டிசம்பர், 2009

குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளையில்















கடந்த 18-12-2009 (வெள்ளிக்கிழமை) குவைத் மண்டலம் அந்தலூஸ் கிளை ஏற்ப்பாடு செய்திருந்த மார்க்க சொற்ப்பொழிவு அந்தலோசில் உள்ள மஸ்ஜிதுன் அமீரியில் வெகு சிறப்பாக நடைப் பெற்றது. நபி வழியா? புது வழியா? என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் கரீம் MISc அவர்கள் சிர்க்,கந்தூரி,கூட்டு,துவா,முறையற்ற தொழுகை,மீலாது விழா,மிஹ்ராஜ்,பராத்,மௌலூது,போன்ற புதுமைகளை பட்டியலிட்டு இவையெல்லாம் நம்மை வழிகேட்டில் கொண்டு சென்றிருக்கும் விஷயங்கள் என்பதை அழகாக தெளிவுபடுத்தினார்.வந்திருந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனுற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 17 டிசம்பர், 2009

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா


ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி
மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாக
நடந்து வருகின்றன.ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோ
அலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றி
தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.


காங்கிரஸ் அரசின் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியாது. மக்கள்
கொந்தளிக்கும் போது அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக இது போல் வாக்குறுதி கொடுத்து
பின்னர் கிடப்பில் போடுவது தான் காலம் காலமாக காங்கிரஸ் கடைப்பிடித்து வரும்
தந்திரம். பாபர் மசூதி அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்பது போல் நூற்றுக்கணக்கான
உதாரணங்கள் உள்ளன.அதற்கான உள்ளடி வேலைகளையும் காங்கிரஸ் செய்ய ஆரம்பித்துள்ளது.


மாநிலத்தைப் பிரிப்பதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது
காங்கிரஸ் கூறுகிறது. சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்க முடியும்
என்றால் அது சாத்தியமே இல்லை. ஏனெனில் தெலுங்கனா பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்கள் மற்ற பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை விட குறைந்த எண்ணிக்கையில்
உள்ளனர். தெலுங்கானா பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் ஆதரவாக
வாக்களிப்பார்கள். மற்றவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் தீர்மானம்
நிச்சயம் தோற்று விடும். சட்டசபையில் தீர்மானம் போட்டுத் தான் பிரிக்கப்படும்
என்றால் தெலுங்கானா பிரிக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது
எப்படி?சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பிரிப்பது என்றால் அளவில் சிறிதாக உள்ள
புறக்கணிக்கப்படும் பகுதி ஒருக்காலும் பிரிந்து செல்ல முடியாது. பெரும்பாலானவர்கள்
பிரிந்து செல்ல ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எனவே ஒரு பக்கம் தெலுங்கானா
அமைக்கப்படும் என்று கூறிவிட்டு மறு பக்கம் தெலுங்கானா அமையாமல் இருப்பதற்குரிய
வேலையைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது காங்கிரஸ் அரசு.


பிரிக்கப்படுமா? பிரிக்கப்படாதா? என்பதை விட பிரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது
தான் நாம் ஆராய வேண்டிய விஷயம்.

ஆந்திர மாநிலத்தின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால்
தான் இக்கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா என்பதை அறிய முடியும். வெள்ளையர்கள்
ஆட்சியின் போதும், நாடு விடுதலை அடைந்த போதும் ஆந்திரா என்ற மாநிலம் இருக்கவில்லை.
தெலுங்கானா எனப்படும் தக்கானம் தான் இருந்தது. இது ஹைதராபாத் நிஜாம் மன்னரின்
ஆளுகையின் கீழ் இருந்தது. நாடு விடுதலை அடைந்த பின்னர் தனி நாடாக இருந்த
தெலுங்கானாவை இந்திய அரசு பலப்பிரயோகம் செய்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது.


இந்தியாவின் ஒரு மாநிலமாக தெலுங்கானா ஆக்கப்பட்டது. தெலுங்கானாவைத் தவிர ஆந்திராவில்
உள்ள மற்ற பகுதிகள் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்தன. தெலுங்கு பேசும்
இப்பகுதியினர் சென்னை மாகாணத்தில் இருந்து தங்கள் பகுதியைப் பிரித்து தெலுங்கு
மாநிலம் அமைக்கப் போராடி வந்தனர். ராமுலு ரெட்டி என்பவர் இதற்காக உண்ணாவிரதம்
இருந்து உயிர் துறந்தவுடன் தெலுங்குப் பகுதிகளில் வன்முறை வெடித்து மத்திய அரசு
பணிந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கு
பகுதிகள் ஆந்திரா எனும் மாநிலமாக ஆக்கப்பட்டது.


சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த பகுதிகள் ஆந்திரா என்றும், நிஜாம் மன்னரின்
ஆளுகையில் இருந்த தெலுங்கானா இன்னொரு மாநிலமாகவும் இருந்தால் குடிமூழ்கப்
போவதில்லை. ஆனாலும் இரண்டையும் இணைத்து ஒரு மாநிலமாக்க வேண்டும் என்று நேருவும்,
பட்டேலும் விடாப்பிடியாக இருந்தனர். இணைக்க வேண்டும் என்று எந்தப் போராட்டமும்
நடக்காமல் இருந்தும் பெரும்பானமை மக்கள் அதை விரும்பாமல் இருந்தும் மக்கள்
விருப்பத்துக்கு மாற்றமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
இதற்காக அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு இணைப்பதில் கேடுகள் தான் அதிகம் என்று
அறிக்கை தந்த பின்பும் தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று மக்கள்
விருப்பத்துக்கு எதிராக இணைத்தனர். இதற்குக் காரணம் என்ன?

தெலுங்கானா பகுதியில்
ஆதிலாபாத், நிஜாம் பாத், கரீம் நகர், ஹைதராபாத், மஹ்பூப் நகர் ஆகிய ஐந்து
மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டங்களாக இருந்தன. (மாவட்டங்களின்
பெயர்களே இதைச் செல்லும் வகையில் உள்ளன). மேடக், வாரங்கல், கம்மம், ரங்காரெட்டி,
நலகொண்டா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கவில்லை. தெலுங்கானா
தனி மாநிலமாக இருந்து முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் தொடர்ந்து ஒரு முஸ்லிம்
தான் முதலமைச்சராக வர முடியும் என்ற நிலைமை வல்லபாய் பட்டேலுக்கும், நேருவுக்கும்
உறுத்தலாக இருந்தது.

சென்னையில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவுடன் தெலுங்கானாவைச்
சேர்த்து விட்டால் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்ற ஒரே
காரணத்துக்காகவே ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக்கப்பட்டது. நேருவும் பட்டேலும்
அத்துடன் திருப்தி அடையவில்லை. சென்னையில் இருந்து பிரிந்த பகுதிகளில் உள்ள ஆதிக்க
சாதியினரை தெலுங்கானா பகுதியில் குடியமர்த்தும் குள்ள நரித்தனத்தையும் செய்து
முடித்தனர். அதாவது தெலுங்கானா பகுதியில் கூட முஸ்லிம்களின் பெரும்பான்மையை ஒழிக்க
வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம். மக்கள் விரும்பாத போதும், இணைக்கக் கூடாது
என்று நிபுணர்கள் அறிக்கை அளித்த பின்பும் இணைப்பதற்கு நேரு சொன்ன காரணம் ஒரு மொழி
பேசும் மக்கள் இரண்டு மாநிலங்களாக இருக்கக் கூடாது என்பது தான். ஆனால் இந்தி
மொழிக்கு மட்டும் பல மாநிலங்கள் இருந்தது எப்படி என்று சிந்திக்கும் போது நேரு
சொன்ன காரணம் பொய்யானது என்பது தெரிய வரும்.


பாகிஸ்தான் பிரிவினையின் போது இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின்
காரணமாகவும், ராணுவ பலம் மூலம் தெலுங்கானா இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதாலும்,
தெலுங்கானா முஸ்லிம்கள் இதை எதிர்த்துப் போராடும் மனநிலையில் இல்லை. அதற்கான
மனவலிமையும் அவர்களுக்கு அப்போது இல்லை.அன்று விதைத்ததைத் தான் காங்கிரஸ் இப்போது
அறுவடை செய்கிறது.


ஆந்திராவை விட தெலுங்கானா நீர் வளமும், கனிம வளமும் நிறைந்ததாக இருந்தும்
ஆந்திராவின் உயர்சாதி ஆதிக்கவாதிகளால் எல்லா வளமும் ஆந்திராவுக்கு என்று ஆனது.
தெலுங்கானாவில் உற்பத்தியாகும் நதிகளில் 90 சதவீதம் தண்ணீர் ஆந்திராவுக்கும், பத்து
சதவீதம் தெலுங்கானாவுக்கும் என்று அநீதி இழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கே
நக்ஸலைட்டுகள் உருவானார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் ஆதிக்க சாதியினர்
ஒடுக்குகிறார்கள் என்பதால் சட்டத்தை நக்ஸலைட்டுகள் கையில் எடுக்கும் அளவுக்கு
தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டது. இதை வெகுஜன மக்களின் கருத்தாக சந்திரசேகர ராவ்
மாற்றினார்.


ஹைதராபாத் நிஜாம் பெயரில் அமைந்த உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களும்
இப்போராட்டத்தில் குதித்ததால் நிலைமை தீவிரமடைந்தது; மத்திய அரசைப் பணிய
வைத்துள்ளது. இப்போது தெலுங்கானா பிரிக்கப்படுவதால் முஸ்லிம்கள் பெரும்பான்மை
மாநிலமாக அது அமையாது. ஏனெனில் குடியேற்றத்தின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை என்பது
குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் கனிசமான இடங்களை முஸ்லிம்கள் பெறக் கூடிய நிலைமை
தெலுங்கானாவில் இருக்கும். அநியாயமாக, கெட்ட எண்ணத்துடன் ஆந்திராவில் சேர்க்கப்பட்ட
தெலுங்கானா தனி மாநிலமாக ஆவது தான் செய்த அநியாயத்திற்கான ஒரே பரிகாரமாகும்
என்பதில் ஐயமில்லை.

மேலும் பொதுவாக பார்க்கும் போது பெரிய மாநிலங்கள்
பிரிக்கப்படுவது சிறந்த நிர்வாகத்தைத் தர உதவும். 30 கோடி மக்களைக் கொண்டதாக இந்தியா
இருக்கும் போது 25 மாநிலங்கள் இருந்தன என்றால் இன்று நூற்றிப் பத்து கோடியை மக்கள்
தொகை தாண்டிய பிறகு 100 மாநிலங்களாவது அமைவது தான் சரியான தீர்வாக இருக்க
முடியும். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குறைந்தது நான்கு பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டால் ஒரு முதல்வரால் சிறப்பாகக் கண்காணிக்க முடியும். அமைச்சர்களை
மக்கள் எளிதாகச் சந்திக்க முடியும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமாக முன்னேற
முடியும். தமிழகத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப் படுவதை யாரும் மறுக்க
முடியாது.

மக்கள் போராட்டம் நடத்தாவிட்டாலும் அறிவும், தூர நோக்கும் மக்கள் நலனில்
அக்கறையும் உள்ள அரசாங்கம் தானாக முன் வந்து மாநிலங்களைப் பிரிக்க வேண்டும். ஒரு
மாநிலம் என்பது ஒரு கோடி முதல் இரண்டு கோடி மக்களைக் கொண்டதாக இருக்கும் வகையில்
பிரிப்பது நாட்டுக்கு நல்லது. இதனால் மொழி வெறி கூட மறைந்து போய்
விடும்.

குவைத் ஜஹ்ராவில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


கடந்த 11/12/09 அன்று குவைத் மண்டல டிஎன்டிஜே, ஜஹ்ரா கிளை சார்பாக தமிழ் ஜூம்ஆ பள்ளியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களுமாக 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்துல்கரீம் எம்.ஐ.எஸ்.ஸி ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதில் மார்க்கத்தை கடைபிடிப்பதற்காக சொந்த ஊரை, நாட்டை எவ்வாறு தியாகம் செய்ய ஸஹாபாக்கள் முன்வந்தார்களோ அது போல் நாமும் இந்த மார்க்கத்திற்காக எதையும் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை டிஎன்டிஜே ஜஹ்ரா கிளை சகோதரர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் டிஎன்டிஜே குவைத் மண்டல மர்கஸில் கேள்வி பதிலுடன் மார்க்க உரை நடைபெற்றது. அதிலும் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் நடைபெற்ற 4 வது மாபெரும் இரத்த தான முகாம்!






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 4ம் தேதி நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 4ம் தேதி நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது.

இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும், குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முகாமில் 130க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது., குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற முகாமில் 130க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 7 டிசம்பர், 2009

குவைத் மண்டலம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் நான்காவது இரத்த தான முகாம்.







கடந்த 4-12-2009ம் தேதி குவைத் மண்டல டிஎன்டிஜே சார்பாக நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும்இ குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற மாதம் 130 க்கும் மேற்ப்பட்டோர் குருதிக் குடை செய்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 டிசம்பர், 2009

குவைத் ஜஹரா ஏரியாவில் மார்க்க சொற்ப்பொழிவு.

அஸ்ஸலாமுஅலைக்கும்
குவைத் ஜஹரா ஏரியாவில் மார்க்க சொற்ப்பொழிவு.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்புரை : சகோதரர்.அப்துல் கரீம் MISc (TNTJ மாநில பேச்சாளர்,பேராசிரியர் இஸ்லாமிய கல்லூரி,கடையநல்லூர்.)
தலைப்பு : ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்.
நாள் : 11-12-2009 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு
இடம் : தமிழ் ஜூம்மா பள்ளி, கஸர, ஜஹரா.
குறிப்பு : TNTJ மர்கசிலிருந்து வாகனம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.