சனி, 29 ஆகஸ்ட், 2009

குவைத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நபி வழி உம்ரா பயணம்!




குவைத் டிஎன்டிஜே சார்பாக ஆர்வமுள்ள பலர் 19-8-09 முதல் 29-8-09 நாள் வரை நபி வழி உம்ரா விற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நபிவழியில் உம்ரா கிரியைகளை முடித்து விட்டு அனைவரையும் நபிவழியில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களான மினா, அரபா மைதானம், முஸ்தலிபா, ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டதோடு வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட ஸவ்ர் குகை, ஹிரா குகை அழைத்துச் செல்லப்பட்டது.இந்த உம்ரா பயணத்தின் மற்றொரு பிரிவாக நன்மையை நாடி மஸ்ஜிதுன்னபவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு மதீனாவில் வரலாற்று பின்னனிகளைக் கொண்ட இடங்களான குபா பள்ளி, கிப்லத்தைன் பள்ளி, அகழ்போர், உஹதுப் போர், பத்ர் போர் ஆகியன நடந்த இடங்களுக்கும், மக்கா மதீனா ஆகிய இரு இடங்களில் உள்ள வரலாற்றுப் பின்னனி சிறப்புகளைப் பற்றி குவைத் மண்டல தலைமை தாயி முகிப்புல்லாஹ் உமரி அவர்களின் சொற்பொழிவுகளும் நடந்தது.

இப்பயணத்தில் குவைத், ஜித்தா, மக்கா, மதீனா ஆகிய மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் சந்தித்து கலந்து பேசி அழைப்புப் பணி பற்றிய கருத்துப்பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக