திங்கள், 7 செப்டம்பர், 2009

இஸ்லாம் கூறும் மனித நேயம்


குவைத் அம்கரா கேம்பில் உள்ள ஐ.பி.சி நிலையத்தின் உறுதுணையோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஜெஹரா கிளையினர்
5-09-2009 சனிக்கிழமை ; ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதரர்கள் என இரு தரப்பாரும் வருகை புரிந்திருந்தனர்.

நிகழ்ச்சியை ஐ.பி.சி. நிலையத்தில் பணியாற்றுகின்ற இஸ்லாமிய அழைப்பாளர் சகோ.நளீம் அவர்கள் வரவேற்புரையாற்றி துவக்கி வைத்ததைத் தொடர்ந்து இஸ்லாம் கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து குவைத்திற்கு வருகை புரிந்துள்ள டி.என்.டி.ஜே மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமானசகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக ஜெஹரா கிளையின் தலைவர்முகம்மது யூசுப் உலவி அவர்கள் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.இந்நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து பயன் பெற்று சென்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக