ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் மற்றும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்




ரமலானில் கடைசி வெள்ளி 18-09-2009 அன்று தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய அப்பாசியா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல் வளாகத்தில் அஸர் தொழுகைக்கு பின் tntj குவைத் மண்டல தலைமை தாயி முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் தவ்ஹீதை பின் பற்றாத தவ்ஹீத் வாதிகள் என்ற தலைப்பில் உலக ஆதாயத்திற்காக தவ்ஹீத் வேடம் இடுபவர்களின் பட்டியலையிட்டார்.

அதை தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் முழுமையாக இஸ்லாத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதில் பெண்கள் உட்பட சுமார் இருநூற்று ஐம்பது பேர் கலந்து கொண்டு பயனுற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைதான் கிளை சார்பாக இஃப்தார் உணவு வழங்க பட்டது அப்பாசியா ஏரியாவில் இது போன்ற நிகழ்ச்சிகளை TNTJ அடிக்கடி நடத்த வேண்டும் என்று கலந்துகொண்டோரில் பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக